“தொழிலாளி என்பவர், தன் வாழ்க்கை பூராவும், உழைப்புச் சக்தியே அன்றி வேறல்லர் என்பதும், எனவே அவரது பயன்படுத்தத்தக்க நேரம் முழுவதுமே, இயற்கையாலும் சட்டத்தாலும், மூலதனத்தின் தற் பெருக்கத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டிய உழைப்பு நேரமே... கல்விக்கான நேரம், ஏன், அவரது உடலும் உள்ளமும் கட்டின்றிச் செயல் பட்டு மகிழ்வதற்கான நேரம், ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நேரம் - எல்லாமே பகற்கனவுதான்.”
இடைவிடாத உழைப்பு
மார்க்ஸ் குறிப்பிட்ட இந்த நிலைமை இந்தியா வில் - தமிழ்நாட்டில் உள்ள தனியார் வங்கிப் பணியா ளர்களுக்கு அப்படியே பொருந்தும்.
சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட நேரம் இல்லாமல் காலை 9.30 மணி முதல் இரவு பத்து மணி வரை வேலை, விடுமுறை நாட்களிலும் வேலை என்று கட்டுக்கடங்காமல் வேலை சுமத்தப்படுகிறது. குடும்பத்தோடு நேரம் செலவிட முடியாத காரணத் தால் மன இறுக்கமடைந்து குடும்ப வாழ்க்கையிலும், பணியிலும் சிறந்து செயல்பட இயலாத நிலை ஏற்படுகிறது.
வங்கிக் கிளைகளுக்கு போதுமான ஊழியர்களை நியமிக்காமல் ஏற்பட்ட ஆட்பற்றாக்குறை காரண மாக, வேலை செய்யும் ஊழியர்கள் சனி- ஞாயிறு என்று விடுமுறை நாள்களிலும் வேலைக்கு வர வேண்டி யிருக்கிறது. விடுமுறைகள் கிளைகளிலேயே கழி கின்றன. மதிய உணவு இடைவேளையில் பத்து நிமிடங்களில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வேலையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்ற அளவு க்கு அழுத்தம்.
நிர்வாகரீதியாக இணைய வழிக் கூட்டங்கள் இரவு 2 மணி வரை கூட நீடிப்பது, அதிகாலை 4 மணிக்கே தொலைபேசியில் அழைத்து இலக்கு நிலைமை களைப் பற்றி விசாரிப்பது, இரவு 1 மணிக்கு வாடிக்கையாளர் வீட்டுக்குச் சென்று வராக்கடனை வசூலிக்க நெருக்கடி கொடுப்பது, என தொலைபேசி மூலமும் வாட்ஸ்அப் மூலமும் வீடு சென்ற பிறகும் துரத்தும் பணி நிலைமை ஊழியர்களை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
விழித்திருக்கும் நேரம் முழுவதையும் வங்கிக்கா கவே செலவழிக்க வேண்டியிருக்கும் நிலைமையின் காரணமாகவும் அதனால் ஏற்படும் உடல்நிலை சேர்வு காரணமாகவும் குடும்பத்துடன் நேரம் செலவிடு வதோ, குழந்தைகளோடு விளையாடுவதோ கூட அரி தாகிப் போகிறது. குடும்ப விழாக்களில் சில நேரங்க ளில் கலந்து கொண்டாலும் மொபைல் மூலமாக பணி நிலைமை துரத்துவதால் அங்கும் முழு ஈடுபாடு செலுத்த இயலாமல் போகிறது. காலை கீ போர்டு தட்ட ஆரம்பித்து இரவு 10 மணிக்கு அதிலிருந்து கை எடுக்கும் போது இருக்கும் வலி சொல்லி மாளாது.
இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தனியார் வங்கிக் கிளைகளில் இதுதான் வேலை முறை.
ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யும் போது வேலை மும்முரம் அதிகமாகி உட்காரும் இடத்தி லேயே ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல வேலை நிலைமைகள் மாறி வருகின்றன. இதன் விளைவாக முதுகுவலி, கண்வலி, கல்அடைப்பு, கால்வலி, பக்கவாதம், இளம்வயது மரணம் என்று பல்வேறு பிரச்சனைகளை வங்கித்துறை உட்பட கணினி சார்- பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எதிர் கொள்கிறார்கள்.
பொதுத்துறை வங்கிகளுக்கும் பரவிய தொற்று
1990-களுக்குப் பிறகு நவீன தாராளவாத கொள்கை கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, ஐ.சி.ஐ.சி.ஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி முதலான புதிய தலைமுறை தனியார் வங்கிகள் வேலை நேரம், வேலைச் சுமை தொடர்பான எந்த வரம்புகளையும் பின் பற்றாமல் செயல்பட ஆரம்பித்தன. வணிக வங்கி வேலைகளுக்கு மேல் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான மியூச்சுவல் ஃபண்ட் தொடர் பான சந்தைப்படுத்தல் செய்வது இவற்றோடு எந்த வித பணிபாதுகாப்பும் இல்லாத நிலையில் ஊழியர் களை வேலைக்கு அமர்த்தின. அந்தத் தொற்று தமிழ் நாட்டின் பழைய தலைமுறை தனியார் வங்கிகளுக்கு மட்டுமின்றி, பொதுத்துறை வங்கிகளுக்கும் பரவியுள்ளது.
பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலமும், மேலும் பல வேலைகளை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் கொடுப்பதன் மூலமும், பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன் மூலமும் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து போய், தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடுவதற்கான வலிமை குறைந்துள்ளது. தொழிற்சங்கங்களின் பேரம் பேசும் வலிமையும் குறைந்துள்ளது.
இதற்கான பொதுவான சூழல், அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு சேவை செய்து கொடுப்பதற்காக இந்தியாவில் புற்றுநோய் போல வளர்ந்து விட்ட ஐ.டி சேவை நிறுவனங்களால் உரு வாக்கப்பட்டது. அந்நிறுவனங்களில், தொழிற்சங்கம் என்றோ தொழிலாளர் உரிமைகள் என்றோ பேச்சே இருக்கவில்லை. ஒவ்வொரு ஊழியரும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள தனது மேலாளர், உயர் மேலாளர், அதற்கும் மேல் உள்ள இயக்குனர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கொத்தடிமைகளாக நடந்து கொண்டுதான் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வெளிநாட்டு வாய்ப்புகள் போன்றவற்றை உறுதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இளம் வயதிலேயே உயிர் பறிக்கப்படும் அவலம்
இதன் விளைவாக, வங்கித் துறையைப் போலவே வசதியான, பாதுகாப்பான வேலை, நல்ல ஊதியம் என்று கருதப்படுகிற ஐ.டி சேவைத் துறை நிறுவனங்க ளிலும் இதே போன்ற உடல்நல பாதிப்புகளும் சிறு வயதிலேயே இறந்து போவதும் நோய்த் தொற்றைப் போல அதிகரித்துள்ளன.
ஐ.டி நிறுவனங்களில் பல ஊழியர்களுக்கு மிகை வேலையால் உடல்நலப் பிரச்சனைகள், உளவியல் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக் கின்றன. உடல்நலச் சீர்கேட்டையும் மீறி நிறுவ னத்தின் தேவைகளுக்காக இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது.
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கூட இந்தப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பணிகளில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஊழி யர்களை அமர்த்துவது அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் புற்றீசலாய் முளைத்து இலாப நோக்கத்தையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆசிரி யர்களும், குறிப்பாக பெண் ஆசிரியர்களும் இத்தகைய சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதன் விளை வாக அரசுப் பள்ளிகளிலும் இதே நோய் பரவி வருகிறது.
“சாகும் வரை வேலை செய்வது இன்றைய நடப்பாய் இருப்பது,... ஓராயிரம் இடங்களில் இப்படித்தான் நடக்கிறது. ‘வளங்கொழிக்கும் தொழில்’ நடக்க வேண்டிய ஒவ்வோரிடத்திலும் இப்படித்தான்…”. மூல தனத்துக்கு தளையிடும் வலுவான சட்டங்களும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான தொழிற் சங்க இயக்கமும் இல்லாத 19-ம் நூற்றாண்டு இங்கி லாந்தின் நிலைமை இன்றைய நமது நாட்டிற்கும் பொருந்துகிறது.
அதிகபட்ச உழைப்பை உறிஞ்சும் மூலதனம்
“உழைப்புச் சக்தியினது ஆயுட் காலத்தின் அளவு பற்றி மூலதனத்துக்கு அக்கறையில்லை; அதன் அக் கறைக்குரியதெல்லாம் ஒரு வேலைநாளில் இயங்க வைக்கத்தக்க உழைப்புச் சக்தியின் அதிகபட்ச அளவு மட்டும்தான். மூலதனம் தொழிலாளியின் ஆயுட் காலத்தைக் குறுக்குவதன் மூலம் இந்த நோக்கத்தை அடைகிறது.”
“தங்களை வாட்டி வதைக்கும் கொடுஞ்சர்ப்பத்தி டமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஆலோசித்து ஒரு சட்டத்தை நிறைவேற்று மாறு ஒரு வர்க்கம் என்ற முறையில் கட்டாயப்படுத்த வேண்டும்.” என்று 160 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் எழுதியபடி சட்டங்கள் இயற்றப்பட்டாலும் மூலதனத்தின் தொடர்ச்சியான தாக்குதலால் அவை நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருகின்றன. அவை ஏட்டளவிலானவையாக மாறி வருகின்றன.
“முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் வர லாற்றில் வேலைநாள் என்றால் என்ன என்பது ஒரு போராட்டம் வாயிலாகத் தீர்மானிக்கப்படுகிறது; கூட்டு மூலதனத்துக்கும் கூட்டு உழைப்புக்கும் இடை யிலான, அதாவது முதலாளி வர்க்கத்துக்கும் தொழி லாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் வாயி லாகத் தீர்மானிக்கப்படுகிறது”.
எனவே, தொழிலாளர்கள் வர்க்கமாக திரண்டு, தமது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்வது என்று மட்டும் நின்று விடாமல், உயிர் வாழும் உரிமையை மீட்கும் அபாயநிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றுணர்ந்து எழுச்சியடைய வேண்டிய தருணம் இது. கட்டுரையாளர்: மூத்த பொறியாளர், சென்னையில் இயங்கும் ‘மூலதனம் கற்றல்’ அரங்கத்தின் பொறுப்பாளர்.